Wednesday, July 30, 2008

உன்னில் தொலைத்த என்னை

நெஞ்சை களவு கொண்டு போனவளே
என்னை கலைத்து விட்டு போனவளே

வில்லைக் கண்ணாய் கொண்டவளே
விழி அம்பால் என்னை சாய்த்தவளே

காத்திருந்து
காத்திருந்து கரைகின்றேன்
உன்னை தேடித் தேடித் தொலைகின்றேன்

உன்னில் தெரியாமல் தொலைத்த
என்னை
தெரிந்தே தொலைப்பதற்காக !!!